கிழக்கு மாகாண பொதுச் சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர், தரம்-II இற்கு மாகாண ரீதியான புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


Open Competitive Examination for Recruitment of Social Service Officers Grade-II in Eastern Province-2021


கல்வித் தகைமைகள் :
1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து சமூகவியல் அல்லது உளவியல் அல்லது சமூக சேவை ஆகிய துறைகளில் பட்டம் ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும்.

அத்துடன்

2 கல்விப் பொதுத் தராதர (உ/த) பரீட்சையில் (சாதாரண பொதுப்பரீட்சை தவிர்ந்த) அனைத்துப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்டதல் வேண்டும். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
போதுமானது.)


#வயதெல்லை : 21-35


#போட்டிப்பரீட்சைகள் விபரம்
  1. பொது விவேகம்
  2. பொது அறிவு
  3. கட்டுரையும் சாராம்சம் எழுதுதல்


#பரீட்சைக்கட்டணம் ரூபா. 500/-

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
கிழக்கு மாகாணம்
198, உட்துறைமுக வீதி,
திருகோணமலை

குறிப்பு - விண்ணப்பங்கள் அனுப்புகின்ற கடித உறையின் இடது பக்கமேல் மூலையில் பரீட்சைக் குறியீட்டு இலக்கம் EX/Rec/21/01 என்பதை குறிப்பிடுவதோடு “சமூக சேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021” என குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.
 

 GAZETTE & APPLICATION